News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, November 13, 2017

மாவட்டத்திற்கு வரும் கடிதங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு…
தனி நபர்களும், கிளைகளும் தங்களது கோரிக்கையைக் கடிதங்களாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புகிறார்கள்.
அவற்றில் மாநிலத் தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரத் தக்க கடிதங்களை எக்காரணத்தைக் கொண்டும் தாமதிக்கக் கூடாது.
சில கடிதங்களை ஒரு சில மாவட்டங்கள் பல வாரங்கள் அளவில் கூட “பாதுகாத்து” வைத்திருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.
மாவட்டத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டி வரும் மனுக்களைப் பரிந்துரை செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்பாமல் இருக்கும் மாவட்டங்கள் உடனே அவைகளையும் அனுப்பி வைக்கவும்.
பரிந்துரை செய்ய விருப்பமில்லை என்றால் இந்த மனுக்களைப் பரிந்துரை செய்ய விரும்பவில்லை என்று சொல்லித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டுமேயொழிய எக்காரணம் கொண்டும் அந்த மனுக்களை மாவட்ட நிர்வாகிகளே வைத்திருப்பதை ஏற்க இயலாது.
எனவே இனிவரும் காலங்களில் அவ்வாறு எந்த மாவட்டமும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஏதேனும் மாநிலத்தலைமைக்கு அனுப்பாமல் மாவட்டங்கள் நிலுவையில் வைத்திருந்தால் வரும் 13.11.17 திங்கட்கிழமைக்குள் அந்த மனுக்களை மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

SOURCE : TNTJ.NET

No comments:

Post a Comment