வந்தேமாதரம் கட்டாயம்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்.
மேலும் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம் வந்தேமாதரத்தை தமிழிலும் மொழிபெயர்த்துப் பாடிக்கொள்ளலாம் என்றும், வந்தேமாதரத்தைப் பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மதநல்லிணக்கம் ஆலமரமாக வேர் விட்டுள்ள தமிழகத்தில் ஒரு மதத்தின் கடவுளை உருவகப்படுத்தியுள்ள வந்தேமாதரம் பாடலை பாடச்சொல்லி கட்டாயப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.
விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது நடுநிலையான உத்தரவு போல் தோன்றினாலும், வந்தேமாதரம் பாடாதவர்களை தேசபற்று இல்லதவர்கள் போல் பார்க்கும் நிலை ஏற்படும்.
எனவே சமூக நீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
M. முஹம்மது யூசுஃப்
பொதுச்செயலாளர்
M. முஹம்மது யூசுஃப்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment